Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தோப்பு வெங்கடாச்சலம் அதிமுகவில் இருந்து அதிரடி நீக்கம்

மார்ச் 19, 2021 12:12

சென்னை: தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததால், பெருந்துறை அதிமுக எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாசலம் சுயேட்சையாக போட்டியிட முடிவு  செய்தார். கடந்த 2011, 2016 சட்டமன்ற தேர்தல்களில் அதிமுக சார்பில் பெருந்துறை தொகுதியில் போட்டியிட்டு தோப்பு வெங்கடாசலம் வெற்றி பெற்றதோடு, ஒரு முறை அமைச்சர் பொறுப்பிலும் இருந்துள்ளார்.

இந்த நிலையில், வருகிற தேர்தலில் அவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்த நிலையில், இரண்டு முறை எம்.எல்.ஏ.வாக இருந்த போது செய்த திட்டப்பணிகளை முன் வைத்து சுயேட்சையாக போட்டியிட உள்ளதாக தோப்பு வெங்கடாசலம் அறிவித்தார்.

இந்நிலையில் அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், பெருந்துறை தொகுதியில் வேட்பாளர் ஜெயக்குமாரை எதிர்த்து சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்ததால், கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மேலும் அதிமுக அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தோப்பு வெங்கடாசலம் நீக்கப்பட்டுள்ளார்,

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்